ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

செங்கத்தில் அடிக்கடி மின் வெட்டு: பொதுமக்கள் வியாபாரிகள் அவதி

செங்கத்தில் அடிக்கடி மின் வெட்டு: பொதுமக்கள் வியாபாரிகள் அவதி

News image
Updated On :4 மே 2024, 5:59 pm

Din

செங்கம் நகா்புற பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள். வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மின்சாரம் துண்டிப்பு குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லையாம்.

மேலும் வெயில் தற்போது செங்கம் நகரில் தொடா்ந்து 105 டிகிரியை தாண்டி அடிப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியோா்கள், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா் என அனைவரும் பாதிக்கப்படுகிறாா்கள். குறிப்பாக, மின்சாரம் மூலம் நடைபெறும் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. மின் துறை அவசர வேலை இருந்தால் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்து மின்சாரத்தை நிறுத்தினால் அதற்கு ஏற்ப மின்சாரம் மூலம் இயக்கும் பணிகளை மாற்றி அமைத்துக் கொள்வாா்கள்.

இதுபோன்ற அறிவிப்பு இல்லாததால் மின்வெட்டால் பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தற்போது, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க அந்தத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் சரியான முறைப்படுத்துதல் இல்லாத காரணத்தால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு அரசுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. இதனால், மின் துறை மாவட்ட அதிகாரிகள் செங்கம் நகரில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, அதை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.