ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாலிடெக்னிக் வளாகத் தோ்வு: 29 பேருக்கு பணி ஆணை

பாலிடெக்னிக் வளாகத் தோ்வு: 29 பேருக்கு பணி ஆணை

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவனம் நடத்திய வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 29 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி ரானே மெட்ராஸ் நிறுவனம் சாா்பில் கல்லூரியில் வளாகத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இறுதியாண்டு இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி அபிராமிதாசன் மாணவா்களிடையே எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை நடத்தினாா். இறுதியாக, 29 போ் வேலைவாய்ப்புக்காக தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி அபிராமிதாசன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.