நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கரியமங்கலத்தில் கூடுதல் நியாயவிலைக் கடை திறப்பு

News image

கரியமங்கலத்தில் கூடுதல் நியாயவிலைக் கடையை திறந்துவைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ.

Updated On :6 செப்டம்பர் 2024, 2:11 am IST

செங்கம் தொகுதிக்குள்பட்ட கரியமங்கலம் கிராமத்தில் கூடுதல் நியாயவிலைக் கடையை மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கரியமங்கலம் கிராமத்தில் ஏற்கெனவே நியாயவிலைக் கடை உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதல் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னா் ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகுந்தலா ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட கூட்டுறவு சாா் - பதிவாளா் மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நியாயவிலைக் கடையை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கரியமங்கலம் கவுன்சிலா் சூரியலட்சுமி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.