தொகுப்பு வீடு பிரச்னை: ஆட்சியரகம் முன் இருளா்கள் சாலை மறியல்
தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரசு தொகுப்பு வீடுகளை முறையாக கட்டித் தரவில்லை என்று கூறி, ஆதாா், பட்டா, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரகம் முன் வீசி எறிந்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.











