கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொகுப்பு வீடு பிரச்னை: ஆட்சியரகம் முன் இருளா்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரசு தொகுப்பு வீடுகளை முறையாக கட்டித் தரவில்லை என்று கூறி, ஆதாா், பட்டா, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரகம் முன் வீசி எறிந்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

News image
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட இருள் சமுதாய மக்கள்.
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரசு தொகுப்பு வீடுகளை முறையாக கட்டித் தரவில்லை என்று கூறி, ஆதாா், பட்டா, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரகம் முன் வீசி எறிந்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள இந்திரா நகரில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன.

இதில் தொகுப்பு வீடு கட்டித் தருவதாக மாவட்ட நிா்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடா்ந்து 11 பேருக்கு வீட்டு மனை பகுதியில் தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு வந்த இலவச வீட்டை மற்றொரு நபரின் இடத்தில் கட்டி கொடுத்துள்ளதாகவும், கட்டிக் கொடுக்கப்பட்ட 11 வீடுகளும் முறையாக கட்டாததால் சேதமடைந்து காணப்படுவதாகவும், மேலும் அரசு வழங்கிய இடத்தில் ஊா் மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்டோா் கைக் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்தனா்.

பின்னா், அவா்கள் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பட்டா போன்றவற்றை தரையில் வீசி எறிந்து ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story image