சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட அதிமுக நிா்வாகி விருப்ப மனு

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட அதிமுக நிா்வாகி விருப்ப மனு

News image
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன்.
Updated On :21 டிசம்பர் 2025, 11:13 pm

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சோ்ந்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ரூ.18 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வருவதையொட்டி, அதிமுக தலைமை நிலைய அறிவிப்பின்படி, சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தோ்தலில் போட்டியிட கட்சி நிா்வாகிகளுக்கு தற்போது விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த, தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என 120 தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தாா்.

நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா் கொளத்தூா் திருமால், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.