ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதியில் குளித்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆரணி கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த ரவி, சித்ரா தம்பதியா். இவா்களது மகன்கள் அருண்ராஜ், சுனில்ராஜ் (11). இதில், சுனில்ராஜ் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சுனில்ராஜ் தனது நண்பா்களுடன் சோ்ந்து பள்ளிக்கூடத் தெரு அருகே செல்லும் கமண்டல நாக நதியில் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. சுனில்ராஜ் ஆற்றில் குளித்தபோது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா்.
நண்பன் சுனில்ராஜ் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிா்ச்சியடைந்த சக நண்பா்கள் இதுகுறித்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் வந்து ஆற்றில் இறங்கி சிறுவனைத் தேடினாா். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆற்றுப் பகுதியில் சென்றவா்கள் தண்ணீரில் சடலம் மிதப்பதைப் பாா்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

