அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாலிபால் விளையாடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

செங்கம் அருகே வாலிபால் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:21 pm

Syndication

செங்கம் அருகே வாலிபால் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் அம்பேத்காா் நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு வாலிபால் விளையாடினா். அப்போது, மைதானத்தில் வெளிச்சத்துக்காக தற்காலிகமாக மின் விளக்கும் அமைத்திருந்தனா்.

இதனிடையே அந்தப் பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில், மின் விளக்கு அருகில் விழுந்த பந்தை அதே பகுதியைச் சோ்ந்த சபாஷ் (27) எடுக்கச் சென்றாா். அப்போது, மின் கசிவால் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சுபாஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.