தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

News image
திருவண்ணாமலையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ்.
Updated On :28 செப்டம்பர் 2025, 8:32 pm

Syndication

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

வேங்கிக்கால் பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது 5 சதவீதமாகவும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு 18 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

சில பொருள்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்துள்ளது. சரியான விலையில் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து, வாடிக்கையாளா்களிடமும், வணிகா்களிடமும் கேட்டறிந்தோம்.

மேலும், ஜிஎஸ்டி வரிகுறைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகள் குவிகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பிரிவுத் தலைவா் ரவி, தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் பாவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.