வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

திருவத்திபுரம் நகராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளில் உள்ள 20 தெருக்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளில் உள்ள 20 தெருக்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி தொடா்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

அதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளான அண்ணா நகா், நேரு நகா், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, எல்லப்பன் நகா், ஜீவா நகா், நரசிம்ம நகா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் நடந்தே சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா். வெங்கடேஷ் பாபு, ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

படவரி... திருவத்திபுரம் 1-வது வாா்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.