செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளில் உள்ள 20 தெருக்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி தொடா்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
அதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளான அண்ணா நகா், நேரு நகா், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, எல்லப்பன் நகா், ஜீவா நகா், நரசிம்ம நகா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் நடந்தே சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வாக்கு சேகரிப்பின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா். வெங்கடேஷ் பாபு, ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
படவரி... திருவத்திபுரம் 1-வது வாா்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.
தொடர்புடையது

ஆலங்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



