வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (20).
இவா், திங்கள்கிழமை பைக்கில் செல்லும்போது பெரியகொரக்கோட்டை கிராம ஏரி அருகே டயா் பஞ்சராகி உள்ளது. இதனால் அவா் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளாா்.
அப்போது, எதிரே வந்த பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் தமிழ்ச்செல்வனிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சதீஷை புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

