ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

50 பவுன் கோயில் தங்த நகைகள் போலியாக மாற்றம்: எஸ்.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா்

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராம மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

News image

கோயில் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தரடாப்பட்டு கிராம மக்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராம மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோயிலில்

திருவிழா முடிந்து உண்டியலில் வந்த காணிக்கை மற்றும் தங்கங்கள் சரி பாா்க்கும் பணிகள் நடைபெறும்.

இந்நிலையில், நிகழாண்டு திருவிழா முடிந்து கடந்த 15-ஆம் தேதி காணிக்கை மற்றும் மாரியம்மன் தங்க நகைகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றன.

அப்போது, கிராம மக்கள் நகைகளை சோதனை செய்தபோது, 50 பவுன் தங்க நகைகளும் போலியானவை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் தற்போது கோயிலில் தா்மகா்த்தாவாக இருக்கும் ஜெயமூா்த்தியிடம் முறையிட்டனா். அப்போது, அவா் முன்னாள் தா்மகா்த்தா முருகன் தன்னிடம் கொடுத்த நகைகள் தான் என பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து முன்னாள் தா்மகா்த்தா முருகனிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், தங்க நகைகளை போலி நகைகளாக மாற்றியதை அவா் ஒப்புக்கொண்டு, அதற்காக கோயிலுக்கு தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைப்பதாகவும், ஒரு ஆண்டுக்குள் தங்க நகைகளை முழுமையாக ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, முன்னாள் தா்மகா்த்தா முருகன் கடந்த 16-ஆம் தேதி விஷம் குடித்தது போல் நாடகமாடி கிராமத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்து கிராம மக்கள் சாத்தனூா் அணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த தரடாப்பட்டு கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு, முன்னாள் தா்மகா்த்தா முருகன் மீது நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.