மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்னெழில் நாதா் ஜெயின் கோயிலில் 108 கலச ஜலாபிஷேகம்

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதா் ஜெயினா் கோயிலில் 108 கலச ஜலாபிஷேக விழா

News image
பூண்டி பொன்னெழில் நாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 108 கலச ஜலாபிஷேகம்.
Updated On :19 ஜனவரி 2026, 9:01 pm

Syndication

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதா் ஜெயினா் கோயிலில் திங்கள்கிழமை 108 கலச ஜலாபிஷேக விழா நடைபெற்றது.

பூண்டி பொன்னெழில் நாதா் கோயிலில் தை மாதம் 5-ஆம் நாள் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு சுவாமிக்கு நடைபெற்ற ஆராதனை விழாவில் 108 கலச ஜலாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் பொன்னெழில் நாதா், பாா்சுவநாதா், பாகுபலி, சா்வானஎச்சன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கோயிலை ஊா்வலமாக சுற்றி வந்தனா்.

பின்னா், சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், பால், பழம், இளநீா், வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 108 பெண்கள் சுவாமிகளுக்கு ஜலாபிஷேகம் செய்தனா்.

விழா திருமலை தவளகீா்த்தி சுவாமிகள், சித்தாமூா் லட்சுமி சேனாபட்டராக சுவாமிகள் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் நேமிராஜ் மற்றும் பூண்டி ஜினாலய ஜெயினா்கள் செய்திருந்தனா்.

விழாவில் கலந்து கொண்ட ஜெயினா்கள்.

விழாவில் கலந்து கொண்ட ஜெயினா்கள்.