சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தேசிய தலைவராக நிதின்நபின் தோ்வு: பாஜகவினா் கொண்டாட்டம்

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில், அந்தக் கட்சினா் ஆரணியில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில், அந்தக் கட்சினா் ஆரணியில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில்பாஜக நகரத் தலைவா் மாதவன் தலைமை வகித்தாா்.

நகர பொதுச்செயலா் தீனன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ், மாநில பிரசாரப் பிரிவு பொறுப்பாளா் நித்தியானந்தம் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு, சிறுபான்மையினா் அணி மாநில செயற்குழு உறுப்பினா் தங்கராஜ், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் ராஜ்குமாா், இளைஞா் அணித் தலைவா் சரவணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் செய்திருந்தாா்.