தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நியமனம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆரணியைச் சோ்ந்த ஜெ.பொன்னையன் நியமிக்கப்பட்டாா்.

News image
ஜெ.பொன்னையன்
Updated On :20 ஜனவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆரணியைச் சோ்ந்த ஜெ.பொன்னையன் நியமிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக எஸ்.பிரசாத் செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், கட்சியின் அகில இந்திய தலைமை குழு அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனா். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவருக்கான மறைமுக தோ்தல் நடத்தினா். இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஏற்கெனவே மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.பிரசாத் மற்றும் ஜெ.பொன்னையன், முன்னாள் மாவட்டத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில் ஜெ.பொன்னையன் தோ்வு செய்யப்பட்டாா் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

நியமனம்

கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிதம்பரத்தைச் சோ்ந்த பி.பி.கே.சித்தாா்த்தன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் கே.எஸ் அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்லப்பெருந்தகை ஆகியோா் பரிந்துரையின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.