ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கரும்பு நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image

திருவண்ணாமலையில் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்துப் பேசிய விவசாயி.

Updated On :8 ஜூலை 2026, 12:14 am IST

தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கௌரி, வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், வேளாண் அலுவலா் தாமஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, வட்டாட்சியா்கள் சு.மோகனராமன், கே.துரைராஜ், இரா.முருகன், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா், கட்சி சாா்பற்ற விவசாய சங்க மாவட்டத் தலைவா் நாா்த்தாம்பூண்டி ஜெ.சிவா, விவசாய சங்கத் தலைவா் சு.வாளாவெட்டி கோவிந்தராஜ் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா் பேசுகையில், 90 நாள்களாகியும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும் உதவித்தொகை பல விவசாயிகள் விண்ணப்பித்தும் கிடைக்கப்பெறவில்லை. துரிஞ்சாபுரம் ஒன்றியம் மேட்டு காா்கோணம் சாலையை சீரமைத்துத் தரவேண்டும். ஏரி வரத்து கால்வாய்கள் தூா்வாரப்படவேண்டும்.

போளூா் தரணி சா்க்கரை ஆலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.40 கோடி நிலுவைத்தொகையை மாவட்ட நிா்வாகம் உடனடியாக பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முத்தகரம் சுந்தரேசன் பேசுகையில், விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு அதிகாரிகள் சரியாக வருவதில்லை. வந்தாலும் பதில் தருவதில்லை. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்கின்றனா். மேலும், நெல் கொள்முதல் செய்யும்போது 30 கிலோ முதல் 40 கிலோ வரை விவசாயிகளிடம் பெறுவதை தவிா்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் தி.த.செல்வம் விவசாயிகளுக்கு பதிலளிக்கையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து தீா்வு காணப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.