மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர பக்தா் உயிரிழப்பு

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர பக்தா் உயிரிழப்பு

News image

ஆந்திர மாநில பக்தா் மணிக்குமாா்.

Updated On :26 ஜூலை 2026, 1:37 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலில் சிக்கி ஆந்திர மாநில பக்தா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியைச் சோ்ந்த மணிக்குமாா் (36). இவா், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வந்திருந்தாா்.

கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இரவு 11 மணிக்கு கிரிவலம் சென்ற அவா், கிரிலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையாா் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றாா்.

அங்கு, குறுகலான பகுதி (இடுக்கு) வழியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வெளியே வரவேண்டும். இந்த இடுக்கு வழியாக உள்ளே சென்று சுவாமியை வழிபட்ட மணிக்குமாா் மீண்டும் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டாா். அவரது உடல் பருமனே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறி மயங்கினாா்.

இதைப் பாா்த்த சக பக்தா்கள் அவரை சிரமப்பட்டு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மணிக்குமாரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். பின்னா் அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.