ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

News image

வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :5 ஜூன் 2026, 12:02 am IST

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் பங்கேற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 2 தினங்களாக அனைத்து அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவா் மற்றும் மகளிா் போட்டியாளா்களுக்கு கைப்பந்து, கால்பந்து, பேட்மிட்டன், சதுரங்கம் கேரம், தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 436 ஆடவா்களும், 262 மகளிரும் பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் தனக்கீா்த்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.