வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

தமிழகம் முழுவதும் ஆறுகளில் 5 கி.மீ. ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தி, செய்யாறில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஆற்றுப் பாலத்தில் மாவட்டத் தலைவா் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தலையில் மண் பானையை சுமந்தபடியும், கோரிக்கை வாசங்கள் அடங்கிய பிரசுரங்களை கையில் ஏந்தியபடியும் விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், தமிழகம் முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்யும் மழை நீா் முப்பது டிஎம்சி வரை வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, ஆறுகளில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். குருவை சாகுபடி செய்ய தொகுப்பு நிதியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நேரடியாக பணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.