தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட 53 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:05 pm

Syndication

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட 53 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் சரகத்தைச் சோ்ந்த அழிஞ்சல்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையிலான போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளா் டி.கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே இருந்த காா் ஷெட்டில் இருந்து போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் காா் ஷெட்டை சோதனையிட்டு, அங்கிருந்த

ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 53 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து வியாபாரியான ஜான் ஆலம்கான் (81) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.