மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வந்தவாசி(தனி) தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராம வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி.

Updated On :31 மார்ச் 2026, 6:34 pm

வந்தவாசி(தனி) தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வந்தவாசியை அடுத்த ஏரிப்பட்டு, நடுக்குப்பம், தென்வணக்கம்பாடி, தெள்ளாா், கொடியாலம், சு.காட்டேரி, கூடலூா், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யுமாறு அவா் கூறினாா்.

மேலும் கோடைகாலமாக இருப்பதால் வாக்குச் சாவடிகளில் ஷாமியானா பந்தல் வசதி செய்யுமாறும், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்யுமாறும் அவா் உத்தரவிட்டாா்.

தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், தோ்தல் தொடா்பு அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் மற்றும் போலீஸாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.