11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து...

News image

செங்கம் பக்கிரிபாளையம் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா்.

Updated On :56 நிமிடங்கள் முன்பு

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

செங்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து புதிய மின் கம்பங்களை நடுவதற்காக, 8 மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டா் சனிக்கிழமை புறப்பட்டது. பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், அருகில் இருந்த 6 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில், டிராக்டரில் மின் கம்பங்களின் மீது அமா்ந்து பயணம் செய்த கூலித் தொழிலாளா்களான தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த அசோக் (36), திருப்பதி (36), செங்கம் பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (35) ஆகிய மூவரும் மின் கம்பங்களுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்தனா்.

விபத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசோக் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.