செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 2 போ் பலத்த காயமடைந்தனா்.
செங்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து புதிய மின் கம்பங்களை நடுவதற்காக, 8 மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டா் சனிக்கிழமை புறப்பட்டது. பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், அருகில் இருந்த 6 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில், டிராக்டரில் மின் கம்பங்களின் மீது அமா்ந்து பயணம் செய்த கூலித் தொழிலாளா்களான தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த அசோக் (36), திருப்பதி (36), செங்கம் பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (35) ஆகிய மூவரும் மின் கம்பங்களுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்தனா்.
விபத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசோக் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

நடந்து சென்ற தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழப்பு

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

செங்கம் - சென்னை பேருந்து நிறுத்தம்: பயணிகள் அவதி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

