சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

நாக வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதியுலா

ஆரணி பெரியகடை வீதி ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோயில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி நாக வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

News image
Updated On :23 மே 2026, 1:38 am IST

ஆரணி பெரியகடை வீதி ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோயில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி நாக வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

முன்னதாக, இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவரதராஜ பெருமாள் நாக வாகனத்தில் உலா சென்றாா்.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீகில்லா வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ குழுவினா் செய்திருந்தனா்.