/
செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய ஆய்வாளா் காண்டீபன் மற்றும் போலீஸாா் ராந்தம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள ஒரு கடையில் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டபோது, அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 42 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து கடை உரிமையாளா் ஆறுமுகம் (65) என்பவரை கைது செய்தனா்.







