சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பிளஸ் 2 தேர்வு மையங்களில் பறக்கும் படை கண்காணிப்பு

வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை பறக்கும் படையினர் கண்காணிப்பு செய்தனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை பறக்கும் படையினர் கண்காணிப்பு செய்தனர்.

வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஊரீசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் பார்வையிட்டார்.

மாவட்டம் முழுவதும் 42,748 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வின்போது, 3,025 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள் 31 பேர் சொல்வதைக் கேட்டு எழுத நியமனச் சலுகை செய்யப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் கல்வி மாவட்டத்தில் 12 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 10 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.