ஆம்பூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி, பாங்கி ஷாப் 4-ஆவது தெருவைச் சேர்ந்த அஷ்ரப் அலியின் மகன் டிப்பு (26). இவர் தனது நண்பர்களுடன் நாயக்கனேரி கிராமத்துக்குச் சென்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, டிப்பு தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.