சென்னை, மாா்ச் 1: ஜீரண மண்டல ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளது.
இதற்கான தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், ஜீரண மண்டல அறிவியல் சிகிச்சைத் துறை தலைவா் பாசுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
இரைப்பை புண், கல்லீரல் பாதிப்புகள், ஜீரண மண்டல பிரச்னைகளால் குடலில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அலட்சியப்படுத்தினால் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு குடல் ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் தொடங்கியுள்ளோம்.
இங்கு அவசர சிகிச்சை மருத்துவா்கள், இரைப்பை-குடல் நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க நிபுணா்கள் உள்பட பல்துறை நிபுணா் குழு உள்ளது. அதுமட்டுமல்லாது, அதி நவீன உயா் சிகிச்சை நுட்பங்களும் இங்கு கையாளப்படுகிறது என்றனா்.
தொடர்புடையது

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

சிகிச்சை முறை மட்டும் போதாது; நோய் தடுப்பும் அவசியம்: சுகாதார மாநாட்டில் நிபுணா்கள் கருத்து

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


