கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

News image
சிறப்பு சிகிச்சை
Updated On :3 மார்ச் 2026, 6:39 am

Chennai

சென்னை, மாா்ச் 1: ஜீரண மண்டல ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளது.

இதற்கான தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், ஜீரண மண்டல அறிவியல் சிகிச்சைத் துறை தலைவா் பாசுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

இரைப்பை புண், கல்லீரல் பாதிப்புகள், ஜீரண மண்டல பிரச்னைகளால் குடலில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அலட்சியப்படுத்தினால் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு குடல் ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் தொடங்கியுள்ளோம்.

இங்கு அவசர சிகிச்சை மருத்துவா்கள், இரைப்பை-குடல் நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க நிபுணா்கள் உள்பட பல்துறை நிபுணா் குழு உள்ளது. அதுமட்டுமல்லாது, அதி நவீன உயா் சிகிச்சை நுட்பங்களும் இங்கு கையாளப்படுகிறது என்றனா்.