தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது

பேர்ணாம்பட்டு அருகே ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 2 போலி நிருபர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:26 pm

DIN

பேர்ணாம்பட்டு அருகே ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 2 போலி நிருபர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பேர்ணாம்பட்டு டவுன் நியாமத் வீதியைச் சேர்ந்தவர் உருது ஆசிரியர் இம்தியாஸ் அஹமத் (34). குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் உள்ள உருது பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த இவர், 2 வாரங்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கில் மாறுதலாகி, பேர்ணாம்பட்டை அடுத்த எரிகுத்தி மேட்டில் உள்ள உருது பள்ளியில் பணிபுரிந்து 
வருகிறார். 
இந்நிலையில், திங்கள்கிழமை காலை வகுப்பில் இருந்த இம்தியாஸ் அஹமதுவிடம் வந்த 2 பேர் தங்களை தனியார் டிவி சேனலின் நிருபர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். 
பின்னர், அவர்கள் இம்தியாஸ் அஹமதுவிடம், "மேல்ஆலத்தூர் பள்ளியில் பணியிலிருந்தபோது, அப்பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தங்கள் மீது புகார் வந்துள்ளது. 
அதை நாங்கள் செய்தியாக டிவி, செய்தித் தாள்களில் வெளியிட உள்ளோம். ரூ. 60 ஆயிரம் கொடுத்தால் விட்டு விடுகிறோம்' எனக் கூறி மிரட்டினார்களாம். அவர்களின் புகாருக்கு இம்தியாஸ் அஹமது மறுப்பு தெரிவித்து, பணம் தர மறுத்துள்ளார். தொடர்ந்து 4 மணி நேரமாக அவர்கள் பள்ளியில் அமர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், பள்ளிக்குச் சென்ற போலீஸார் மேற்கண்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் குடியாத்தம் தரணம்பேட்டையைச் சேர்ந்த ரிஸ்வான்பாபு (30), சந்தப்பேட்டை படேல் சாஹிப் தெருவைச் சேர்ந்த சையத் அர்ஷத் (39) என்பதும்,  இருவரும் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.