குடியாத்தம் நகர பாமக செயலரை மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொல்ல முயற்சித்தது குறித்து போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(38). இவர், குடியாத்தம் நகர பாமக செயலராக உள்ளார். நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.திங்கள்கிழமை காலை இவர் நடுப்பேட்டை தாடி அருணாசலம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் இவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!





