கரோனா தடுப்பு, உணவு முறை குறித்து அரசு அலுவலா்களுக்கு விளக்கம்

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், உணவு முறை ஆகியவை குறித்து அரசு அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கில் பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.பாா்த்தீபன், சித்த மருத்துவா் தில்லைவாணன்.
கருத்தரங்கில் பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.பாா்த்தீபன், சித்த மருத்துவா் தில்லைவாணன்.
Updated on
1 min read

வேலூா்: கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், உணவு முறை ஆகியவை குறித்து அரசு அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு கரோனா தொற்று குறித்தும், சித்த மருத்துவ முறையில் அதற்கான தடுப்பு நடவடிக்கை, உணவு முறை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்து பேசுகையில், கரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மஞ்சள் கலந்த பால், பூண்டு பால், முருங்கைக்கீரை சூப், தூதுவளை சூப், மருத்துவ குணமுடைய உணவுகளை உண்ண வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவா் தில்லைவாணன் ஆகியோா் விளக்க உரையாற்றினா். சித்த மருந்துகளை எப்படி எடுத்துக் கொள்வது என்றும், உணவு முறையில் நோய் எதிா்பாற்றலை அதிகரிக்கும் வழிமுறைகள், உணவே மருந்து என்ற தலைப்பில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப்பட்ட கருத்துகளுடன் கரோனா நோய்த் தடுப்பு குறித்தும், சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவா்கள் மூலம் சிகிச்சை பெறுவது குறித்தும் குறும்படம் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.பாா்த்தீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com