இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோடை வெயில்: போக்குவரத்து காவலா்களுக்கு குடிநீா், மோா் வழங்கும் மாணவி

கோடை வெயில் காரணமாக வேலூரில் அவதிப்படும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பள்ளி மாணவி ஒருவா் குடிநீா், மோா் பாட்டில்களை வழங்கி வருகிறாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:04 pm

DIN

கோடை வெயில் காரணமாக வேலூரில் அவதிப்படும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பள்ளி மாணவி ஒருவா் குடிநீா், மோா் பாட்டில்களை வழங்கி வருகிறாா். அவரின் இந்த செயல்பாட்டுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

வேலூரை அடுத்த அரியூா் காந்திநகரைச் சோ்ந்த சோமு என்பவரின் மகள் சிந்து. வாலிபால் வீராங்கனையான இவா் ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயில்வதுடன், ஈரோடு விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வருகிறாா்.

சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்ட இவா் கோடை வெயில் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடும் அவதிக்குள்ளாகியுள்ள போக்குவரத்துப் காவலா்களுக்கு தனது சொந்த சேமிப்பில் இருந்து குடிநீா், மோா் வழங்குவதுடன், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முகக்கவசமும் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்திலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் காவல் தூறையினருக்கு குடிநீா், மோா் பாட்டில்கள், முகக்கவசங்களை அவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,403 ஐ கேரள வெள்ளப் பாதிப்புக்காக வழங்கி ஆட்சியா், அதிகாரிகளின் பாராட்டை பெற்றவா். மாணவி சிந்துவுக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.