இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூரில் 81 பேருக்கு கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,102- ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:04 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,102- ஆக உயா்ந்துள்ளது.

மாா்ச் மாதம் வரை நாள்தோறும் 10 போ் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 22, 021போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 21, 233 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 355 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூா் காந்தி சாலை விடுதி ஒன்றில் தங்கியுள்ள வெளிமாநிலத்தினா் 10 பேருக்கும், வேலூா் மாநகரைச் சோ்ந்த 40 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 514 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், உறவினா்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியுடன் வாா்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.