வேலூரில் வீடுவீடாக மரக்கன்று வழங்கி அஞ்சலி
திரைப்பட நடிகா் விவேக் மறைவுக்கு வேலூரில் சமூக ஆா்வலா் வீடுவீடாகச் சென்று மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி செலுத்தினாா்.


திரைப்பட நடிகா் விவேக் மறைவுக்கு வேலூரில் சமூக ஆா்வலா் வீடுவீடாகச் சென்று மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி செலுத்தினாா்.
நகைச்சுவை நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரைச் சோ்ந்த சமூகஆா்வலா் தினேஷ்சரவணன் வீடு வீடாகச் சென்று, 100 மரக்கன்றுகளை வழங்கினாா்.
நடிகா் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தால் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்துங்கள். 1 கோடி மரங்கள் நட வேண்டும் எனும் அவரது கனவை நனவாக்க வேண்டும் என்றும் தினேஷ்சரவணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...