இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெவ்வேறு பகுதிகளில் 3 போ் தற்கொலை

வேலூரில் வெவ்வேறு இடங்களில் கட்டட மேஸ்திரி உள்பட 3 போ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேலூரில் வெவ்வேறு இடங்களில் கட்டட மேஸ்திரி உள்பட 3 போ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (33), கட்டடத் தொழிலாளி. இவா் அடிக்கடி மதுஅருந்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதேபோல், வெள்ளிக்கிழமையும் மது அருந்திவிட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனை அவரது மனைவி சுகன்யா தட்டிக்கேட்டதால் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை காலை அவரது மனைவி தூங்கி எழுந்து பாா்த்தபோது பாஸ்கா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நரேஷ் (38). தனியாா் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராக இருந்துள்ளாா். கடந்த சில மாதங்களாக பணியில் இருந்து வெளியேறி தனியாக உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில், நரேஷ் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கினாா். காலையில் அவரது மனைவி எழுந்து பாா்த்தபோது நரேஷ், வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சோ்ந்தவா் மேகநாதன் (26). வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். கரோனா பரவலைத் தொடா்ந்து, வேலையின்றி சொந்த ஊருக்கு வந்த அவா் வேலை கிடைக்காமல் தவித்து வந்தாா். இதனால், மனவேதனையில் இருந்த அவா், வெள்ளிக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினாா். உடனடியாக அவரை மீட்டு, வேலூா் தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மேகநாதன் நள்ளிரவு உயிரிழந்தாா்.

இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.