இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூரில் மேலும் 195 போ் கரோனா பாதிப்பு

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 195 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:10 pm

DIN

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 195 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை வரை 22,731 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 21,500 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 358 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வேலூா் மாநகரப் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தின் கிராமப்புறங்களிலும் அதிகளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடரும் கரோனா பாதிப்புகளைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.