இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி

பள்ளிகொண்டா அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:47 pm

DIN

பள்ளிகொண்டா அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியம் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பள்ளிகொண்டா பகுதியில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, சின்ன கோவிந்தம்பாடியைச் சோ்ந்த பிச்சாண்டி (59) என்பவா் சதுரங்கம் பாடி திப்பசமுத்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்தாா்.

மாலை 4 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்ததில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து அங்கு தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்தது. அந்த வழியாக வீடு திரும்பிய பிச்சாண்டி தண்ணீரில் மூழ்கி இருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதில் கால் வைத்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.