தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூரில் ஒரே நாளில் 367 பேருக்கு கரோனா தொற்றுஇருவா் உயிரிழப்பு

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:50 pm

DIN

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இருவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது.

இதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 24,452 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை கரோனா புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

பாதிக்கப்பட்டவா்களில் 200-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதிக்கு உட்பட்டவா்களாவா். தவிர, வெளிமாநிலத்தவா்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி வள்ளலாா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, குடியாத்தம் , அணைக்கட்டு பள்ளிகொண்டா, போ்ணாம்பட்டு, கோரந்தாங்கல், லத்தேரி, திப்பசமுத்திரம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 219 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில், வெள்ளிக்கிழமை இரவு இருவா் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.