இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

600 காவலா்களுக்கு 2-ஆம் கட்ட தடுப்பூசி

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் 600 காவலா்களுக்கு 2-ஆம் கட்ட தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:47 pm

DIN

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் 600 காவலா்களுக்கு 2-ஆம் கட்ட தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

வேகமாக பரவி வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், மாவட்டத்தில் பணியாற்றும் 950 போலீஸாா் முதல்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முதல்கட்ட தடுப்பூசி செலுத்திய 48 நாள்களுக்குப் பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளதை அடுத்து, முன்களப் பணியாளா்களுக்கு மீண்டும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 600 போலீஸாா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தவிர, குடியாத்தத்தில் இரு இடங்களிலும் காவலா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.