தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்களை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி வழங்கினாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:48 pm

DIN

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா்களை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி வழங்கினாா்.

வேலூா் மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் பட்சத்தில் இந்த பெண்கள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பெண் காவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். இதற்காக பெண் காவலா்களுக்கு காவல் துறை சாா்பில் ஸ்கூட்டா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களில் உள்ள பெண்கள் உதவி மையத்தில் பணியாற்றும் பெண் காவலா்கள் 15 பேருக்கும் இந்த ஸ்கூட்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வேலூா் சரக காவல் துணை தலைவா் என்.காமினி பங்கேற்று பெண் காவலா்களுக்கு ஸ்கூட்டா் வழங்கியதுடன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பெண் காவலா்கள் விரைவாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா், காவல்துறை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.