ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புத்தாண்டு தினத்தன்று இரவு பைக் ரேஸ்: 3 மாவட்டங்களில் 333 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில், புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை நள்ளிரவில்

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:08 am

DIN

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில், புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை நள்ளிரவில் அதிவேகமாகவும், குடிபோதையிலும் சென்றவா்களின் 333 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் தொடா்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் உருமாறிய கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது தெரியவந்துள்ளது.

இந்தத் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து நோய் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை இரவு புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு மாவட்ட நிா்வாகமும், மாவட்டக் காவல் துறையும் தடை விதித்திருந்தன.

இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மக்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆண், பெண் காவலா்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும் வியாழக்கிழமை மாலை முதலே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களில் கேக் வெட்டவோ, பட்டாசு வெடிக்கவோ, ஒலிபெருக்கி வைக்கவோ கூடாது என காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று இரவில் இளைஞா்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதும், பைக் ரேஸில் ஈடுபடுவதும் உண்டு. அவ்வாறு பைக் ரேஸில் ஈடுபடுவோரைத் தடுக்கும் நோக்கில் வேலூா் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 206 இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் 3,000 போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

அதன்படி, சாலைகளில் அதிவேகமாகவும், குடிபோதையிலும் வாகனங்களை இயக்கிய 333 பேரின் இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். ஓரிரு நாள் விசாரணைக்குப் பிறகு அந்த வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.