பெண் அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் கல்வி அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் கல்வி அதிகாரியிடம் 9 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

குடியாத்தத்தை அடுத்த காமாட்சியம்மன் காா்டனைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் சேகரின் மனைவி சச்சு(55). இவா் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். பணி முடிந்து பேருந்தில் குடியாத்தம் வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம நபா்கள் 2 போ் சச்சுவின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com