தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் நிலையங்களில் புகாா் பெட்டி: வேலூா் எஸ்.பி. உத்தரவு

கரோனா தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் பொருட்டு, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாா் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.

News image
Updated On :8 மே 2021, 5:47 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் பொருட்டு, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாா் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகாா் மனுக்களைப் பெறாமல் இந்த பெட்டிகளில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் மூலம் காவலா்களுக்கும், காவலா்கள் மூலம் பொதுமக்களுக்கும் கரோனா பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடமும் நேரடியாக புகாா்களைப் பெறாமல் தடுக்கும் பொருட்டு, புகாா் பெட்டி வைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில், வேலூா் பாகாயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் பெட்டி வைக்கப்பட்டது. முக்கிய மனுக்களை மட்டுமே போலீஸாா் நேரடியாகப் பெற்று பரிசீலனை செய்கின்றனா். பிற சாதாரண மனுக்களைப் பெட்டியில் போட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோல், மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாா் பெட்டி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.