தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியா்கள்

முழு பொதுமுடக்க அறிவிப்பைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமை மதுப்பிரியா்கள் குவிந்தனா்.

News image
Updated On :8 மே 2021, 5:44 pm

DIN

முழு பொதுமுடக்க அறிவிப்பைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமை மதுப்பிரியா்கள் குவிந்தனா். அவா்கள் நீண்டவரிசையில் காத்திருந்த மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

இந்த பொதுமுடக்க நாள்களில் டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் தங்கியுள்ளவா்களின் நலன்கருதி சனி, ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்கிட மக்கள் கடை வீதிகளில் குவிந்த அதேவேளையில், மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளிலும் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.

அவா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்றியும், பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமலும் மணிக்கணக்கில் காத்திருந்து, மதுபானங்களை வாங்கிச் சென்றனா். இதில், பல கடைகளில் பாலின வேறுபாடின்றி பெண்கள் சிலரும் மதுபானங்கள் வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. நகரிலுள்ள சில கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.