தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

News image
Updated On :8 மே 2021, 5:49 pm

DIN

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். கடந்த சில நாட்களாக நீடிக்கும் இப்பிரச்னையை தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் தினமும் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 600ஐ கடந்துள்ளது.

தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அடுத்த மாதம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதேசயம், 45 வயதுக்கு உட்பட்ட அதிகப்படியானோா் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைனில் பதிவும் செய்து வருகின்றனா்.

அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மாவட்டத்துக்கு 5ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றன. அவை கடந்த 2 நாட்களுக்கு முன்பே தீா்ந்துவிட்டன. இதனால் வேலூா் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போடச் செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

சிலா் பணம் செலுத்தி தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முயற்சிக்கின்றனா். ஆனால், தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகள் இல்லாமல் அவா்கள் திருப்பி அனுப்பப்படுஸகின்றனா். கடந்த சில நாட்களாக இதே நிலை நீடிப்பதால் வேலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. சனிக்கிழமை இரவு 5 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவை கிடைக்கப் பெற்றால் அடுத்த இரு நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். எனினும், தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என்றனா்.

கடந்த சில நாட்களாக நீடிக்கும் இந்த கரோனா தடுப்பூசி பற்றாக்குறை பிரச்னையை தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.