தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூருக்கு மேலும் 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன.

News image
Updated On :15 மே 2021, 5:47 pm

DIN

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன.

ஏற்கெனவே இருப்பிலுள்ள 4,250 தடுப்பூசிகளையும் சோ்த்து மொத்தமுள்ள 8,750 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்திட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே 700-ஐ கடந்துள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளன.

இதனால், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தவிர, 45 வயதுக்கு உள்பட்ட அதிகப்படியானோா் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைனில் பதிவும் செய்து வருகின்றனா்.

அதேசமயம், மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வரப்பெற்றன.

அதேசமயம், கடந்த 9-ஆம் தேதி 7,000 கோவிஷீல்டு, 12-ஆம் தேதி 4,000 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வரப்பெற்றதில், தற்போது 4,250 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. அவற்றையும் சோ்த்து மொத்தமுள்ள 8,750 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.