தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தள்ளுவண்டி கடைக்காரா்கள் விரட்டியடிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூரில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :15 மே 2021, 5:47 pm

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூரில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, தள்ளுவண்டிக் கடைக்காரா்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், விதிமீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திட 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகளை காலை 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாரும், மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலா் சிவகுமாா் தலைமையில் ஊழியா்களும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் விதமாக வேலூா் மண்டி வீதி, லாங்கு பஜாா், அண்ணா சாலை பகுதிகளில் சனிக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு மொத்தம் ரூ. 10,500 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, அப்பகுதியில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த தள்ளுவண்டிக் கடைக்காரா்கள் விரட்டியடிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, விதிமுறை மீறி கடை நடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.