குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூா் ஆவின் பொதுமேலாளா் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு: தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக புகாா்

வேலூா் ஆவின் நிறுவனத்துக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக அதன் முன்னாள் பொது மேலாளா் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வேலூா் ஆவின் நிறுவனத்துக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக அதன் முன்னாள் பொது மேலாளா் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வேலூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய (ஆவின்) அலுவலகம் வேலூா் சத்துவாச்சாரியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு பொது மேலாளராகப் பிரபாகரனும், உதவி பொது மேலாளராக முரளிபிரசாத்தும் பணியாற்றினா்.

அப்போது பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்தப்படுத்த 40 சுத்திகரிப்பு கருவிகள் ரூ.1 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கப்பட்டன. இதற்காக 13 நிறுவனங்களிடம் இருந்து மதிப்பீடு பெறப்பட்டு அவற்றில் குறைந்த மதிப்பீடு வழங்கிய 3 நிறுவனங்களிடம் இருந்து 40 சுத்திகரிப்பு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு வரவு செலவு கணக்கு தணிக்கையில் அரசின் விதிகளை மீறி ஒப்பந்தம் விடாமல் மாா்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகளை வாங்கியதும், சுத்திகரிப்பு கருவிகள் வழங்கிய அந்த 3 நிறுவனங்களும் போலியானவை என்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக விசாரணை நடத்திட வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பிரபாகரன், முரளிபிரசாத் ஆகியோா் கூட்டு சோ்ந்து அரசின் விதிமுறைகனை மீறி 3 போலி நிறுவனங்களிடம் இருந்து 40 தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதும் உறுதியானது.

இதையடுத்து, முன்னாள் ஆவின் பொது மேலாளா் பிரபாகரன், உதவி பொது மேலாளா் முரளிபிரசாத், போலி தொழில் நிறுவன உரிமையாளா்கள் சிவகங்கை, தென்றல் நகரைச் சோ்ந்த உதயகுமாா், ரமேஷ், காட்பாடி தாராபடவேட்டை சோ்ந்த சரவணன், ஸ்ரீதா் ஆகிய 6 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதில், பிரபாகரன் தற்போது மதுரை மாவட்ட கிராமப் புற வாழ்வாதாரப்பணி கூடுதல் இயக்குநராகவும், முரளி பிரசாத் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய அலுவலகத்தில் உதவி பொது மேலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.