ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பூசி குறித்து வீடுகள், கடைகள்தோறும் விழிப்புணா்வு

குடியாத்தம் நகரில், நகராட்சி அதிகாரிகள் வீடுகள், கடைகள்தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:06 pm

DIN

குடியாத்தம் நகரில், நகராட்சி அதிகாரிகள் வீடுகள், கடைகள்தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.குடியாத்தம் நகரில் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்.பள்ளி, ரோட்டரி சங்கம், விநாயகபுரம் கூட்டு சாலை ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இயங்கி வந்தன.தற்போது கூடுதலாக நகராட்சி அலுவலகம், வீரபத்திரி மேஸ்திரி தெரு, நடுப்பேட்டை, மவுசன்பேட்டையில் உள்ள மசூதிகள், சித்தூா்கேட்டில் ஷெரீப்நகா் உள்ளிட்ட 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.இந்நிலையில் சனிக்கிழமை குடியாத்தம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் தலைமையில், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் குழுக்களாக வீடுகள், கடைகள்தோறும் சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.பழைய பேருந்து நிலைய பகுதியில் பி.சிசில்தாமஸ் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப்பணியாளா் பிரபுதாஸ், பென்னி உள்ளிட்டோா் கடைகள்தோறும் சென்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த சிலரது கடைகளைப் பூட்டினா்.கடை உரிமையாளா்கள், கடைகளில் வேலை செய்யும் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான கடிதத்தை வைத்திருக்க வேண்டும் என எச்சரித்தனா்.கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 100 சதவீத இலக்கை அடைய வேண்டும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிசில்தாமஸ் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.