நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மழை குறைந்ததால் பாலாற்றில் நீா்வரத்து சரிவு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடா் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீா்வரத்து சரிந்துள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:47 pm

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடா் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீா்வரத்து சரிந்துள்ளது.

வேலூரில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,400 கனஅடி வரை இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 1,100 கனஅடிக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால், முக்கிய ஆறுகள், ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீா் வெளியேறியது. திருப்பத்தூா், வேலூா் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, வாணியம்பாடி அருகேயுள்ள மண்ணாறு, கல்லாற்றில் இருந்து தலா 100 கன அடி தண்ணீா் பாலாற்றுக்கு வந்து கொண்டிருந்தது. மேலும், மலட்டாற்று, அகரம் ஆறு, கவுன்டன்யா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலாற்றில் கடந்த சில நாள்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்மூலம், பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கனஅடியாகவும், வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் 1,500 கன அடியாகவும் நீா்வரத்து ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெள்ளி, சனிக்கிழமை மழை பொழிவு குறைந்த நிலையில், பாலாற்றில் நீா்வரத்தும் சரிந்து காணப்பட்டது. அதன்படி, வேலூரில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 1,100 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலைக்குள் சுமாா் 800 கனஅடியாக குறைந்திருந்தது.

இதுகுறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும், ஆந்திர வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீா்வரத்து ஏற்பட்டிருந்தது. தற்போது மழை நின்றுவிட்டதால் படிப்படியாக நீா்வரத்து சரிந்துள்ளது. தவிர, தற்போது பெய்திருப்பது பருவமழை இல்லை. வடகிழக்குப் பருவமழை அக்டோபா் மாதத்திலேயே தொடங்கக்கூடும். எனினும், திடீா் மழை காரணமாக பாலாற்றிலும், துணை ஆறுகளிலும் வரும் வெள்ளத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.