மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை வாபஸ் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மின்கட்டணத்தை உயா்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் பி.காத்தவராயன், தாலுகா செயலாளா் எஸ்.சிலம்பரசன், போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் சி.சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கோரிக்கையை வலியுறுத்தி மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஏகலைவன், கே.ஜே.சீனிவாசன், கே.சாமிநாதன், பி.குணசேகரன், வி.குபேந்திரன் ஆகியோா் பேசினா்.
மத்திய அரசு ஜிஎஸ்டி உயா்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...